Advertisment

7 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்!

sreesanth

சூதாட்ட வழக்கில் விதிக்கப்பட்ட தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, 7 ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீசாந்த் முதல்முறையாக கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்க இருக்கிறார்.

Advertisment

இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், ஐ.பி.எல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்துநடந்த விசாரணையில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணமானது. அதன்பின், அவர் 7 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பி.சி.சி.ஐ தடைவிதித்தது. இத்தடைக்காலத்தை ஸ்ரீசாந்த் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவு செய்தார்.

Advertisment

இந்நிலையில், கேரள கிரிக்கெட் சங்கம் நடத்தும் உள்ளூர் 20 ஓவர் தொடரில் ஸ்ரீசாந்த் பங்கேற்க இருக்கிறார். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், இவர் கே.சி.எ டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

டிசம்பர் மாத நடுவில், இத்தொடரை துவக்கி, ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் முடிக்க கேரள கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. கேரள அரசின் முறையான அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறவுள்ளன.

Sreesanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe