Advertisment

பெர்த் டெஸ்ட் ; இந்திய அணியில் இரு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

ind

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் நாளை பெர்த்தில் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக அஸ்வின் மற்றும் ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு முதுகுப் பகுதியிலும், அஸ்வினுக்கு அடிவயிற்றிலும் தசை பிடிப்பு ஏற்பட்டதால் இருவரும் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இரு முக்கிய வீரர்களுக்குகாயம் ஏற்பட்டது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதற்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

Advertisment

Ashwin Rohit sharma indvsaus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe