Skip to main content

சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

sourav ganguly

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கங்குலிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்ததாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. மேலும் கங்குலி தற்போது நலமாக இருப்பதாகவும், அவருக்கு அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "சவுரவ் கங்குலி மாரடைப்பு காரணமாக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் விரைவாக பூரண நலம் பெற வேண்டும். எனது சிந்தனையும் பிரார்த்தனையும் அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

 

Next Story

கங்குலியை தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கும் கரோனா பாதிப்பு!

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

GANGULY

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கடந்த  27 ஆம் தேதி அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட கங்குலி, கடந்த 31 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரை மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுத்தியுள்ளனர்.  இந்தநிலையில் கங்குலியின் மகள் உள்பட அவரது குடும்பத்தினர் நால்வருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து கரோனா உறுதி செய்யப்பட்ட நால்வரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

 


 

Next Story

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

ganguly

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கடந்த  27 ஆம் தேதி அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இந்தநிலையில் தற்போது கங்குலி கரோனாவில் இருந்து குணமாகியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார். கரோனாவிலிருந்து குணமடைந்திருந்தாலும் அடுத்த 14 நாட்களுக்கு கங்குலி, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார்.

 

கங்குலியின் மாதிரி சோதனை செய்யப்பட்டதில், அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை என கண்டறியப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.