Skip to main content

“முதன்முதலாக மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் அவுட் ஆனார்”- சுவாரசிய தகவல்கள்

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

ஒரு விளையாட்டு மூலம் ஒரு வீரர் பிரபலமாவது இயல்பு. ஆனால் ஒரு வீரர் மூலம் விளையாட்டு பிரபலமாவது அரிதிலும் அரிதாக நடக்கும் ஒன்று. அதை செய்து காட்டியவர் சச்சின் என்னும் சகாப்தம். கிரிக்கெட்டுக்காக இங்கு சச்சின் இல்லை. சச்சினுக்காகவே இங்கு கிரிக்கெட். சச்சினுக்காக கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்கள் இங்கு ஏராளம். இந்தியாவில் கிரிக்கெட் தெரியாத பலருக்கு சச்சின் என்ற பெயர் பரிச்சயம்.
 

sachin tendulkar

 

 

சச்சின் பற்றிய சுவாரசிய தகவல்கள் 
 

1988-ஆம் ஆண்டு நடந்த ஒரு கண்காட்சி போட்டியில், பாகிஸ்தானுக்காக சச்சின் ஃபீல்டிங் செய்திருக்கிறார். 
 

வான்கடேவில் இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் இடையே நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் ‘பால் பாய்’ ஆக சச்சின் பணியாற்றியிருக்கிறார்.
 

சச்சின் தேவ் பர்மன் என்ற இசைகலைஞரின் நினைவாக சச்சின் என்ற பெயர் அவரது தந்தையால் வைக்கப்பட்டது. 
 

விளம்பர நிகழ்ச்சிகளில் மதுபானம் தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மறுத்த சச்சின் நாட்டில் உள்ள இளைஞர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர். இது சச்சின் என்ற ஒருவரை ரோல் மாடலாக கருதும் பலருக்கு தவறான உதாரணமாக அமைந்து விடும் என்பதால் நடிக்க மறுத்தார்.   
 

போலியோ ஒழிப்பு மற்றும் சமூக அக்கறை கொண்ட விளம்பரங்கள்  போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை இலவசமாக செய்து தந்துள்ளார். 
 

மும்பையில் உள்ள அப்னாலயா என்கிற ஒரு அரசு சாரா அமைப்பில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நலிந்த குழந்தைகளுக்கு உதவி வருகிறார். இலவச கல்வி, ஸ்டேஷனரி பொருட்கள், சீருடைகள் போன்றவை வழங்கி வருகிறார். 
 

சச்சினுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம். ஆஸ்திரேலியா தொடரில் கவர் டிரைவ் ஷாட்டில் தொடர்ந்து அவுட் ஆக, 241 ரன்கள் அடித்தபோது ஒரு கவர் டிரைவ் ஷாட் கூட அடிக்கவில்லை.
 

இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் இவர்தான்.
 

சென்டிமென்ட்கள் மீது நம்பிக்கை கொண்டவர். கிரிக்கெட் என்றால் 10-ஆம் நம்பர் ஜெர்சி இல்லாமல் விளையாடமாட்டார். 
 

விளையாடப் போவதற்கு முன்னால் தன்னுடைய இடது பக்க பேடைத்தான் முதலில் அணிவார். ஆடப்போகும் பிட்ச்சில் முன்னரே ஒரு நடை நடந்துவிட்டு வருவார். போட்டிக்கு முன்னர் இசைக்கேட்பது எப்பொழுதும் பழக்கம்.
 

கிரிக்கெட் மட்டுமல்லாது வேறு விளையாட்டிலும் தனது பங்களிப்பை தந்துள்ளார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளஸ்டர்ஸ் அணிக்கும், பிரிமியர் பேட்மிட்டன் லீக் தொடரில் பெங்களூரு பிளஸ்டர்ஸ் அணிக்கும், ப்ரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணிக்கும் கோ- ஓனராக இருந்தார். 
 

பிராட் ஹாக் தன் விக்கெட்டை எடுத்த பின், அந்த பந்தில் கையெழுத்து வாங்கியபோது ‘இது மீண்டும் நடக்காது’ என எழுதித் தந்தார் சச்சின். அதன் பிறகு அவர் ஹாக் பந்தில் அவர் அவுட் ஆகவில்லை.
 

பல முதன்முறை என்ற சாதனைகளை வைத்து இருக்கும் சச்சின்தான், முதன்முதலாக மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் அவுட் ஆனார்.
 

1998-ல் சார்ஜாவில் நடைபெற்ற கோக்கோ-கோலா முத்தரப்பு ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்துக் கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார். 
 

1999-ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு சச்சின் 136 ரன்களைக் குவித்தார்.
 

பாகிஸ்தான் அணிக்கு எதிராக கும்ப்ளே 10 விக்கெட் எடுத்த போது, முதல் ஓவர் வீச வந்த கும்ப்ளேவின் மேற்சட்டையையும், தொப்பியையும் சச்சின் வாங்கி அம்பயரிடம் தந்தார். விக்கெட்கள் வீழ்ந்தது. இதனால் கும்ப்ளே 10 விக்கெட் எடுக்கும்வரை ஒவ்வொரு முறையும் இதை பின்பற்றினார் சச்சின். 
 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் இரட்டை சதத்தை அடித்தபோது கிரிக்இன்போ இணையதள சர்வர் கிராஷ் ஆனது.
 


சச்சின் அதிக எடை கொண்ட பேட்டை பயன்படுத்தி வந்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் க்ளுஸ்னர் மட்டுமே இவரை விட உலகில் அதிக எடை கொண்ட பேட்டை பயன்படுத்தி வந்தார்.
 

அமைதியான குணம் கொண்ட சச்சின் பள்ளி பருவத்தில் சற்று குறும்பாக இருந்தார்.
 

டென்னிஸ் வீரரான ஜான் மெக்கென்ரோவின் தீவிர ரசிகராக சச்சின் இருந்தார்.
 

sachin

 

 

சச்சின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
 

யாருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.  
 

கனவுகளை மாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் ஒருநாள் கனவுகள் நிஜமாக மாறும்.
 

உயர்ந்த நிலையை அடைந்தாலும் உழைப்பை நிறுத்த வேண்டாம். 
 

எந்தத் துறையை நீங்கள் சார்ந்திருந்தாலும் ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பு.  
 

திறமை முக்கியமனதாக இருந்தாலும் பயிற்சி மற்றும் ஒழுங்குமுறை மட்டுமே நீண்ட கால வெற்றியை அடைய உதவும். திறமை கொண்டு கடினமாக உழைக்காதபோது திறமை பயனற்றது. 
 

நீண்ட கால வெற்றியை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். புதிய ஸ்கில்களை கற்றுக் கொள்ள வேண்டும். 
 

எவ்வளவு வெற்றியை அடைந்தாலும் எளிமையாகவும், தன்னடக்கமாகவும் இருப்பது அவசியம். 
 

கடவுளுக்கும், வாழ்க்கையில் உதவியவர்களுக்கும் நன்றியோடு இருப்பது முக்கியமான ஒன்று. 
 

தனது மதிப்பை எப்பொழுதும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுப்பற்றவராக இருக்காதீர்கள்.
 

கவனம் செலுத்தி, அர்ப்பணித்தால் உங்கள் குறிக்கோள்களை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.
 

தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதை அல்லது ஊக்குவிப்பதில் இருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும். 
 

வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் செய்யும் செயலை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். கவனம் செலுத்துதல், புதிதாக சிந்தித்தல், அதிக ஊக்கம் போன்றவை அதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். 
 

குருவை மதித்து நடப்பதுதான் நல்ல மாணவனுக்கு அழகு என்ற சொல்லுக்கு ஏற்ப வாழ்ந்தவர் சச்சின்.

 

 

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

ஒன்பதாவது வருடமாக தொடரும் சாதனை; கலக்கும் இந்திய அணி!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Record continues for ninth consecutive year; A mixed Indian team

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29, ஜோ ரூட் 24 என ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த  ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர்.  ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார். ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் ஆகியோர் அரைசதம் கடந்தனர். படிக்கல் 65 ரன்களிலும், சர்பிராஸ் 56 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த ஜடேஜா மற்றும் ஜுரேல் ஆகியோர் 15 ரன்களில் வெளியேறினர். கடைசியாக குல்தீப் 30, பும்ரா 20 ரன்கள் சிறப்பாக ஆட இந்திய அணி 124.1 ஓவர்களில் 477 ரன்கள் குவித்தது.

259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது.  36 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்தார். ரூட் மட்டும் அரைசதம் கடந்து 84 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரரானார். முதல் மூன்று இடங்களில் முறையே வார்னே, கும்ப்ளே, முரளிதரன் ஆகியோர் உள்ளனர். மேலும் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தை (36 முறை) பிடித்துள்ளார். கும்ப்ளே 35 இரண்டாவது இடத்தில் உள்ளார். பும்ரா, குல்தீப் தலா 2  விக்கெட்டுகளை எடுத்தனர். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார்.

இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசி, பேட்டிங்கிலும் ஜொலித்த குல்தீப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கடந்த 2015 முதல் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக சாதனை படைத்து வருகிறது. ஒன்பதாவது வருடமாக டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது.

வெ.அருண்குமார்