Skip to main content

“முதன்முதலாக மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் அவுட் ஆனார்”- சுவாரசிய தகவல்கள்

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

ஒரு விளையாட்டு மூலம் ஒரு வீரர் பிரபலமாவது இயல்பு. ஆனால் ஒரு வீரர் மூலம் விளையாட்டு பிரபலமாவது அரிதிலும் அரிதாக நடக்கும் ஒன்று. அதை செய்து காட்டியவர் சச்சின் என்னும் சகாப்தம். கிரிக்கெட்டுக்காக இங்கு சச்சின் இல்லை. சச்சினுக்காகவே இங்கு கிரிக்கெட். சச்சினுக்காக கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்கள் இங்கு ஏராளம். இந்தியாவில் கிரிக்கெட் தெரியாத பலருக்கு சச்சின் என்ற பெயர் பரிச்சயம்.
 

sachin tendulkar

 

 

சச்சின் பற்றிய சுவாரசிய தகவல்கள் 
 

1988-ஆம் ஆண்டு நடந்த ஒரு கண்காட்சி போட்டியில், பாகிஸ்தானுக்காக சச்சின் ஃபீல்டிங் செய்திருக்கிறார். 
 

வான்கடேவில் இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் இடையே நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் ‘பால் பாய்’ ஆக சச்சின் பணியாற்றியிருக்கிறார்.
 

சச்சின் தேவ் பர்மன் என்ற இசைகலைஞரின் நினைவாக சச்சின் என்ற பெயர் அவரது தந்தையால் வைக்கப்பட்டது. 
 

விளம்பர நிகழ்ச்சிகளில் மதுபானம் தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மறுத்த சச்சின் நாட்டில் உள்ள இளைஞர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர். இது சச்சின் என்ற ஒருவரை ரோல் மாடலாக கருதும் பலருக்கு தவறான உதாரணமாக அமைந்து விடும் என்பதால் நடிக்க மறுத்தார்.   
 

போலியோ ஒழிப்பு மற்றும் சமூக அக்கறை கொண்ட விளம்பரங்கள்  போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை இலவசமாக செய்து தந்துள்ளார். 
 

மும்பையில் உள்ள அப்னாலயா என்கிற ஒரு அரசு சாரா அமைப்பில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நலிந்த குழந்தைகளுக்கு உதவி வருகிறார். இலவச கல்வி, ஸ்டேஷனரி பொருட்கள், சீருடைகள் போன்றவை வழங்கி வருகிறார். 
 

சச்சினுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம். ஆஸ்திரேலியா தொடரில் கவர் டிரைவ் ஷாட்டில் தொடர்ந்து அவுட் ஆக, 241 ரன்கள் அடித்தபோது ஒரு கவர் டிரைவ் ஷாட் கூட அடிக்கவில்லை.
 

இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் இவர்தான்.
 

சென்டிமென்ட்கள் மீது நம்பிக்கை கொண்டவர். கிரிக்கெட் என்றால் 10-ஆம் நம்பர் ஜெர்சி இல்லாமல் விளையாடமாட்டார். 
 

விளையாடப் போவதற்கு முன்னால் தன்னுடைய இடது பக்க பேடைத்தான் முதலில் அணிவார். ஆடப்போகும் பிட்ச்சில் முன்னரே ஒரு நடை நடந்துவிட்டு வருவார். போட்டிக்கு முன்னர் இசைக்கேட்பது எப்பொழுதும் பழக்கம்.
 

கிரிக்கெட் மட்டுமல்லாது வேறு விளையாட்டிலும் தனது பங்களிப்பை தந்துள்ளார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளஸ்டர்ஸ் அணிக்கும், பிரிமியர் பேட்மிட்டன் லீக் தொடரில் பெங்களூரு பிளஸ்டர்ஸ் அணிக்கும், ப்ரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணிக்கும் கோ- ஓனராக இருந்தார். 
 

பிராட் ஹாக் தன் விக்கெட்டை எடுத்த பின், அந்த பந்தில் கையெழுத்து வாங்கியபோது ‘இது மீண்டும் நடக்காது’ என எழுதித் தந்தார் சச்சின். அதன் பிறகு அவர் ஹாக் பந்தில் அவர் அவுட் ஆகவில்லை.
 

பல முதன்முறை என்ற சாதனைகளை வைத்து இருக்கும் சச்சின்தான், முதன்முதலாக மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் அவுட் ஆனார்.
 

1998-ல் சார்ஜாவில் நடைபெற்ற கோக்கோ-கோலா முத்தரப்பு ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்துக் கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார். 
 

1999-ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு சச்சின் 136 ரன்களைக் குவித்தார்.
 

பாகிஸ்தான் அணிக்கு எதிராக கும்ப்ளே 10 விக்கெட் எடுத்த போது, முதல் ஓவர் வீச வந்த கும்ப்ளேவின் மேற்சட்டையையும், தொப்பியையும் சச்சின் வாங்கி அம்பயரிடம் தந்தார். விக்கெட்கள் வீழ்ந்தது. இதனால் கும்ப்ளே 10 விக்கெட் எடுக்கும்வரை ஒவ்வொரு முறையும் இதை பின்பற்றினார் சச்சின். 
 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் இரட்டை சதத்தை அடித்தபோது கிரிக்இன்போ இணையதள சர்வர் கிராஷ் ஆனது.
 


சச்சின் அதிக எடை கொண்ட பேட்டை பயன்படுத்தி வந்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் க்ளுஸ்னர் மட்டுமே இவரை விட உலகில் அதிக எடை கொண்ட பேட்டை பயன்படுத்தி வந்தார்.
 

அமைதியான குணம் கொண்ட சச்சின் பள்ளி பருவத்தில் சற்று குறும்பாக இருந்தார்.
 

டென்னிஸ் வீரரான ஜான் மெக்கென்ரோவின் தீவிர ரசிகராக சச்சின் இருந்தார்.
 

sachin

 

 

சச்சின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
 

யாருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.  
 

கனவுகளை மாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் ஒருநாள் கனவுகள் நிஜமாக மாறும்.
 

உயர்ந்த நிலையை அடைந்தாலும் உழைப்பை நிறுத்த வேண்டாம். 
 

எந்தத் துறையை நீங்கள் சார்ந்திருந்தாலும் ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பு.  
 

திறமை முக்கியமனதாக இருந்தாலும் பயிற்சி மற்றும் ஒழுங்குமுறை மட்டுமே நீண்ட கால வெற்றியை அடைய உதவும். திறமை கொண்டு கடினமாக உழைக்காதபோது திறமை பயனற்றது. 
 

நீண்ட கால வெற்றியை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். புதிய ஸ்கில்களை கற்றுக் கொள்ள வேண்டும். 
 

எவ்வளவு வெற்றியை அடைந்தாலும் எளிமையாகவும், தன்னடக்கமாகவும் இருப்பது அவசியம். 
 

கடவுளுக்கும், வாழ்க்கையில் உதவியவர்களுக்கும் நன்றியோடு இருப்பது முக்கியமான ஒன்று. 
 

தனது மதிப்பை எப்பொழுதும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுப்பற்றவராக இருக்காதீர்கள்.
 

கவனம் செலுத்தி, அர்ப்பணித்தால் உங்கள் குறிக்கோள்களை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.
 

தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதை அல்லது ஊக்குவிப்பதில் இருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும். 
 

வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் செய்யும் செயலை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். கவனம் செலுத்துதல், புதிதாக சிந்தித்தல், அதிக ஊக்கம் போன்றவை அதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். 
 

குருவை மதித்து நடப்பதுதான் நல்ல மாணவனுக்கு அழகு என்ற சொல்லுக்கு ஏற்ப வாழ்ந்தவர் சச்சின்.

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.