Skip to main content

ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை குடோனில் தூக்கி வீசிய தந்தை! (வீடியோ)

Published on 01/04/2018 | Edited on 01/04/2018

ஸ்டீவன் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை அவரது தந்தை குடோனுக்குள் தூக்கி வீசும்
காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ஆஸி அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். இந்தக் குற்றத்தில் மூளையாக செயல்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்டுக்கு கடும் தண்டனை விதித்தது ஐசிசி. அதேபோல், வார்னர் மற்றும் ஸ்மித்துக்கு ஓராண்டு மற்றும் பான்கிராஃப்டுக்கு ஒன்பது மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடைவிதித்து உத்தரவிட்டது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

 

இதையடுத்து, சிட்னியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்மித், ‘நடந்த தவறுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நான் செய்த தவறு இந்த நாட்டு மக்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என அனைவரையும் பாதித்துவிட்டது. இந்தப் பேரழிவை ஏற்படுத்தியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்’ என கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

 

 

இந்நிலையில், ஸ்டீவன் ஸ்மித்தின் நடவடிக்கைகளில் விரக்தி ஏற்பட்ட அவரது தந்தை பீட்டர் ஸ்மித், ஸ்டீவன் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை எடுத்துக் கொண்டுபோய் பழைய பொருட்கள் வைக்கும் குடோனில் வீசும் காட்சிகள் வெளியாகின. அப்போது அவர் ‘ஸ்மித் சரியாகிவிடுவான்.. அவன் மீண்டுவருவான்’ என தெரிவித்தார்.

Next Story

என்னை பந்தை சேதப்படுத்த சொன்னவர் இவர்தான்- ஆஸ்திரேலியா அணி வீரர் பரபரப்பு பேட்டி

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

 

cvz

 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயற்சித்த போது சிக்கினார். இதற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இருவருக்கும் ஓராண்டும், பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பான்கிராப்ட் இது பற்றி கூறும்போது 'வார்னர் தான் தன்னை அவ்வாறு செய்யச்சொன்னதாகவும், இது அவரின் யோசனை தான்' எனவும் கூறிருந்தனர். 

மேலும் இது குறித்து அவர், 'போட்டியில் நாங்கள் இருந்த சூழ்நிலையை வைத்து பந்தை சேதப்படுத்தும் யோசனையை வழங்கியது டேவிட் வார்னர் தான். இதற்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்று முடிவு செய்த அவர், சொல்லும் நேரத்தில் அதை செய்ய வேண்டும் எனவும் கூறினார். அதற்கு மேல் எனக்கு வேறு எதுவும் தெரியாது. அணியில் எனக்கு இருந்த மதிப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாக இது அமைந்தது. நானும் மூத்த வீரர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டி இருந்தது. ஆனால் அதை செய்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உணர்ந்திருந்தேன்' என கூறினார்.

 

 

Next Story

ஆஸ்திரேலியாவுக்கு ஸ்மித் வேண்டும்! - ஸ்டீவ் வாக் வேண்டுகோள்

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
Smith

 

 

 

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு குறிப்பிட்ட கால தடைவிதித்து உத்தரவிட்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். உலக கிரிக்கெட் அணிகளுக்கு அச்சுறுத்தலை தந்து மிரட்டும் வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு, இந்தத் தடை உத்தரவு மிகப்பெரிய பின்னடை ஏற்படுத்தியது. 
 

ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் ஸ்மித் மற்றும் வார்னர் இடம்பெற வேண்டும் என்ற குரலை பலரும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாக், ஸ்மித்தை மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரது இடம் யாராலும் நிரப்ப முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, “ஒருவரின் திறமையை ஒரே இரவில் நம்மால் மறந்துவிட்டு, அவரை இழக்கமுடியாது. அந்த இடத்தில் இன்னொருவரை நிறுத்தவும் முடியாது. ஸ்மித் இளமையான வீரரும் கூட. ஆஸ்திரேலிய மக்கள் நிச்சயம் மன்னிப்பார்கள். அவர் செய்த தவறுக்கான மிக மோசமான தண்டனையை அவர் அனுபவித்திருக்கிறார்” என கூறியுள்ளார். 
 

மேலும், “அவருக்கு வாய்ப்பளித்தால் மிக உற்சாகமும், வேகமும் கொண்ட வீரராக செயல்படுவார். அவர் கிரிக்கெட்டை நேசிக்கிறார். அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.