சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புஜாரா மற்றும் சுப்மன் கில் தலா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை விட 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது இந்திய அணி.
அதேபோல் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது