kkr

Advertisment

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல்வேறு வீரர்கள் அணி மாறினர். இந்தநிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்துள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னரே ஷ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி ஏலம் எடுக்கும் என தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து வந்த இயான் மோர்கனை இந்தமுறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.