Shreyas Iyer

13 -ஆவது ஐ.பி.எல் தொடரின் 38 -ஆவது லீக் போட்டி டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

Advertisment

இப்போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்கு கிடைத்த 3 -ஆவது தோல்வியாகும். நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும், டெல்லி அணி 14 புள்ளிகளுடன் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஷிகர் தவான் ஆட்டம் குறித்தும், டெல்லி அணியின் தோல்வி குறித்தும் அவ்வணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "இது கவனமாக இருக்க வேண்டிய நேரம். இனி வரும் போட்டிகளில் கடினமான நேரத்தை எதிர்கொள்ள இருக்கிறோம். கடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஆனால், அது நடந்து முடிந்துவிட்டது. இனி கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும். ஷிகர் தவான் ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மற்ற வீரர்கள் விளையாடுவதற்கு சரியான தளம் அமைத்துக்கொடுக்கிறார். அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். சில போட்டிகள் சொதப்பலாக அமைவது இயல்பானதுதான்" எனக் கூறியுள்ளார்.