Advertisment

டெல்லி அணியின் கேப்டனாக இந்த சாதனையைச் செய்ய விரும்புகிறேன் -ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு!!!

Shreyas Iyer

Advertisment

13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெறும் தொடர் என்பதால் அனைத்து அணி வீரர்களும் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேப்டனாக என்ன சாதனையைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஸ்ரேயாஸ், "தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்ற அணி என்ற சாதனையைப் படைக்க விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணி இந்தாண்டு நிறைய இளம் வீரர்களுடன் வலுவாக உள்ளது. இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன், இந்தாண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பு டெல்லி அணிக்கே அதிகம் இருக்கிறது என்று சில தினங்களுக்கு முன்னால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisment

டெல்லி அணி தன்னுடைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியுடன் வரும் 20-ம் தேதி மோத இருக்கிறது.

IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe