Skip to main content

நெருக்கடியான இக்காலம் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல உள்ளது - ஷிகர் தவான் பேச்சு!!! 

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

Shikhar Dhawan

 

 

கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இக்காலம் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல உள்ளது என ஷிகர் தவான் கூறியுள்ளார்.

 

கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கரோனா அச்சுறுத்தல் நிறைந்த நெருக்கடியான சூழலில் இத்தொடர் நடைபெறுவதால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிசிசிஐ பலப்படுத்தியிருக்கிறது. அமீரகம் சென்ற வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கரோனா தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்ட பின் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். டெல்லி கேபிடல்ஸ் அணி வீரரான ஷிகர் தவான் நெருக்கடியான இக்காலகட்டம் குறித்து தற்போது பேசியுள்ளார்.

 

அதில் அவர், "நம் மனவலிமையை சோதிக்க இது சிறந்த தருணமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது போன்று உள்ளது. இத்தருணம் அனைவருக்கும் புதுமையானது. தனிமையில் நாம், நம்முடன் எவ்வாறு உறவாடிக்கொள்கிறோம் என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது. நாமே நமக்கு சிறந்த நண்பராகவும் இருக்க முடியும், எதிரியாகவும் இருக்க முடியும். எனது உடல் வலிமை மற்றும் மனவலிமையை சரியான அளவில் வைத்துள்ளேன். உடற்பயிற்சி மற்றும் யோகா இதற்கு உதவுகிறது" என்றார்.

 

 

Next Story

மாற்றி எடுத்த வீரர் மாஸ் காட்டிய சுவாரசியம்; ஐபிஎல்-இல் நடந்த ருசிகரம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Shashank Singh batting gt vs pbks match

மாற்றி எடுக்கப்பட்ட வீரரின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024இன் 17ஆவது லீக் ஆட்டம் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு சஹா 11 ரன்னிலே வெளியேறி ஏமாற்றினார். பின்னர் கேப்டன் கில்லுடன் இணைந்த வில்லியம்சன் பொறுமையாக ஆடினார். ஆனால், கேப்டன் கில் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்.

வில்லியம்சன் 26 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் வழக்கத்திற்கு மாறாக அவரும் அதிரடியாக ஆடினார். 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மற்றொரு தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கர் 8 ரன்களில் வெளியேறினார். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும், மறுபுறம் கேப்டன் கில் அரை சதம் கடந்து 89 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். இறுதி ஓவர்களில் அதிரடி ஆட்டக்காரர் ராகுல் டெவாட்டியாவின் 23 ரன்கள் உதவியுடன் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளும், ப்ரார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 200 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் தவான் 1 ரன்னிலே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். முக்கிய ஆட்டக்காரரான் பேர்ஸ்டோவும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது அதிரட் காட்டிய பிரப்சிம்ரன் சிங் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.பெரிது எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசாவும் 15 ரன்களில் அட்டமிழக்க 111-5 என்று தடுமாறியது.

பஞ்சாப் அணி தோல்வி உறுதி என ரசிகர்கள் நினைத்த வேளையில், சஷாங்க் சிங் அதிரடியாக ஆடத் தொடங்கினார். அடுத்து வந்த ஜித்தேஷும் அதிரடியாக ஆரம்பித்தார். ஆனால், அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஜித்தேஷ் 16 ரன்களில் வெளியேறினார். பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விட்ட சஷாங்க் சிங் அரை சதம் கடந்தார். பின்னர் வந்த அஷுட்டோஷ் ஷர்மாவும தன் பங்குக்கு அதிரடியில் இறங்கினார். அஷுட்டோஷ் ஷர்மா 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆக, இறுதி வரை ஆட்டமிழக்கமாமல் நின்ற சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை அபார வெற்றி பெற செய்தார்.

இந்த சஷாங்க் சிங் பஞ்சாப் அணிக்குள் வந்த நிகழ்வு சுவாரசியமானது. ஐபில்2024 மினி ஏலத்தின் போது பஞ்சாப் அணி சஷாங்க் சிங் என்ற வீரரை எடுக்க முன்பே திட்டமிட்டு, அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால், 19 வயது சஷாங்க் சிங்கை எடுப்பதற்கு பதிலாக 32 வயதான சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்து விட்டது.

தற்போது அந்த சஷாங்க் சிங் தான், தனது அதிரடியால் பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தி வெற்றி தேடித் தந்துள்ளார். குஜராத் அணி தரப்பில் நூர் அஹமத் 2 விக்கெட்டுகளும், அஸ்மத்துல்லா, உமேஷ், ரஷித், மொஹித், தர்ஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக சஷாங்க் சிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Next Story

RCB vs PBKS; நிதானமாக ஆடிய பஞ்சாப் கிங்ஸ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

RCB vs PBKS ipl live score update dhawan plays important knock

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். கோலி 35 ரன்களுடனும், பட்டிதார் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.