உலகக்கோப்பை தொடரிலிருந்து இருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் இடது கை பெருவிரலில் காயம் அடைந்தார். லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால், அவர் அடுத்த சில போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்தது. இதனையடுத்து அவருக்கு பதில் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் காயம் குணமடையாததால் தவான் உலகக்கோப்பை தொடரில் மீதமுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு பதில் இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்படுவர் எனவும், அதற்காக ஐசிசி யிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.