ஷாருக்கானை வாங்கிய ப்ரீத்தி ஜிந்தா - பஞ்சாப் அணியில் தமிழர்!

preethi jintha

இந்தியாவில்வருடந்தோறும் நடக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 292 வீரர்கள்இன்று ஏலம் விடப்படவுள்ளனர். இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன்ராய்ஏலம் எடுக்கப்படவில்லை. கேதார்ஜாதாவையும்எந்த அணியும்முதல் கட்ட ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இந்த ஏலத்தில், மோரிஸ்16.25 கோடிக்கும்,மேக்ஸ்வேல் 14.25 கோடிக்கும்ஏலம்போன நிலையில்,ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனை 14 கோடிக்கு ஏலம் எடுத்ததுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. தமிழக வீரர் ஷாருக்கானை5.25 கோடிக்கு ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

அன்கித் ராஜ்புட்டை யாரும் ஏலம் எடுக்கவில்லை. ஆஸ்திரேலிய வீரர் ரிலே மெரிடித், பஞ்சாப் அணி 8 கோடிக்கு ஏலம் எடுத்தது. நேபாளைச் சேர்ந்தசந்தீப் லாமிச்சேன்ஏலம் போகவில்லை.

IPL ipl 2021 ipl auction
இதையும் படியுங்கள்
Subscribe