Skip to main content

ஜெயசூர்யா, காலீஸை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த வங்கதேச வீரர்...

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

உலகக்கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்கதேச அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர்கள் முழுமையாக விளையாடிய வங்கதேச அணி 330 ரன்கள் எடுத்து. இதில் 21 ரன்கள் எக்ஸ்ட்ராஸ் ஆகும். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 21 ரன்கள் எக்ஸ்ட்ராஸ் கொடுத்த அணி அதே 21 ரன்னில் தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

shakib al hasan surpasses jaques kallis and jayasuriya in best cricket allrounder list

 

 

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வங்கதேச வீரர் சஹிப் அல் ஹசன் ஒருநாள் போட்டிகளில் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான அவர் நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் 75 ரன்களும், பந்துவீச்சில் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த விக்கெட் அவரது 250 ஆவது விக்கெட் ஆகும். இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 5000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளார். வெறும் 199 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 250 விக்கெட்டுகளை, 5792 ரன்களையும் சேர்த்து சிறந்த ஆல் ரவுண்டர்களான ஜெயசூர்யா, காலீஸ், அப்ரிடி ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். இதற்கு முன் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா, பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக், ஷாகித் அப்ரிடி, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜேக்ஸ் காலிஸ் ஆகியோர் மட்டுமே 250 விக்கெட்டுகளையும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களையும் சேர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

250  விக்கெட்டுகள் மற்றும் 5000 ரங்களுக்கு மேல் எடுத்த வீரர்கள் பட்டியல்...

1. பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் 269 விக்கெட்டுகளையும் 5080 ரன்கள் சேர்த்துள்ளார்.

2. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 395 விக்கெட்டுகளையும், 8,064 ரன்கள் சேர்த்துள்ளார்

3.இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 323 விக்கெட்டுகளையும் 13,430 ரன்களும் சேர்த்துள்ளார்.

4.தெ.ஆப்பிரிக்க முன்னாள்வீரர் ஜேக்ஸ் காலிஸ் 273 விக்கெட்டுகளையும், 11,579 ரன்களும் சேர்த்துள்ளார்.

 

 

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.