Skip to main content

மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்; ஆதரவளித்த ரஸ்ஸல்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

shah rukh khan

 

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகள், கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய (13.04.2021) போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்ய குமார் யாதவ், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, சிறப்பாக விளையாடியது. ஒருகட்டத்தில் 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதிக்கட்டத்தில் மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியைத் தழுவியதால், கொல்கத்தா அணியின் ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான், அணியின் தோல்வி குறித்து, “ஏமாற்றமளிக்கும் செயல்பாடு. ரசிகர்களிடம் கொல்கத்தா அணி அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறது" என தெரிவித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஷாருக்கானின் ட்வீட் குறித்து, கொல்கத்தா வீரர் ரஸ்ஸலிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நானும் அந்த டிவீட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால் நாளின் முடிவில், கிரிக்கெட் ஆட்டத்தில், என்ன நடக்குமென்பது ஆட்டம் முடியும்வரை உங்களுக்குத் தெரியாது. நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். வீரர்களை பற்றி நான் பெருமைப்படுகிறேன். உங்களுக்குத் தெரியும், நாங்கள் நிச்சயமாக ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் இது உலகத்தின் முடிவு அல்ல. இது இரண்டாவது போட்டி மட்டுமே. இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளப் போகிறோம்" என தெரிவித்தார். 

 

 

Next Story

கிளாசனின் அதிரடி வீண்; இந்திய இளம் வேகத்தின் அசத்தலால் கொல்கத்தா த்ரில் வெற்றி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 win for Kolkata as they beat Hyderabad ipl

ஐபிஎல் 2024 இன் மூன்றாவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக சால்ட் மற்றும் நரைன் களமிறங்கினர். நரைன் 2 ரன்களில் ஆட்டமிழக்க , அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.  அவருக்கு அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் நித்திஷ் ராணாவும் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் சால்ட் நிதானமாக ஆடினார். அவருக்கு துணை நின்ற ரமன்தீப் சிங் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக ஆடிய சால்ட் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து இணைந்த ரிங்கு சிங் மற்றும் ரசல் இணை ஹைதராபாத் அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசல் 7 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற ரிங்கு சிங் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரசல் 64 ரன்களுடனும், ஸ்டாரக் 6 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றனர்.இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய தமிழ்நாட்டு வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்கு அடுத்தபடியாக மார்க்கண்டே 2 விக்கெட்டுகளும் கேப்டன் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் இணை சிறப்பான துவக்கம் தந்தது. பொறுமையாகவும் அவ்வப்போது அதிரடியையும் காட்டிய அந்த இணை முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் குவித்தது. அகர்வால் 32 ரன்களும் அபிஷேக் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 20 ரன்களும்,  மார்க்ரம் 18 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

பின்பு வந்த ஹென்றிச் கிளாசன், அப்துல் சமத் இணை பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அப்துல் சமத் 15 ரன்கள் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஹென்றிச் கிளாசன், சபாஷ் அகமது இணை கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தது.  சிக்ஸர்களில் மட்டுமே கவனம் செலுத்திய கிளாசன் 29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்படும் நிலையில் சபாஷ் அகமது மற்றும் ஹென்றிச் கிளாசன் ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.  கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது ரன் எதுவும் எடுக்காமல் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதன் மூலம் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 win for Kolkata as they beat Hyderabad ipl

ஐபிஎல் வரலாற்றில் சாதனை விலைக்கு எடுக்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 53 ரன்களை வாரி வழங்கினார்.  அடுத்தபடியாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாமல் தோல்விக்கு காரணமாக அமைந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இளம் வீரர் ஹர்ஷத் ராணா சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்தி கொல்கத்தா அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். கொல்கத்தா அணியில் ஹர்ஷத் ராணா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும்,  ரசல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

-வெ. அருண்குமார்

Next Story

நங்கூரமாய் நின்ற ரிங்கு; நூலிழையில் தப்பிய லக்னோ

Published on 20/05/2023 | Edited on 21/05/2023

 

Anchored Ringu; Lucknow, which survived the war

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 68 ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

 

முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 176 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 58 ரன்களையும் டி காக் 28 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா, தாக்கூர், நரேன் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ரானா தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். 177 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இறுதிவரை களத்தில் போராடிய ரிங்கு 67 ரன்கள் எடுத்தார். ஜேசன் ராய் 45 ரன்களை எடுத்தார். லக்னோ அணி சார்பில் யஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். க்ருணால் பாண்டியா, கிருஷ்ணப்பா கவுதம் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

 

நடப்பு தொடரில் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் ரன் சேஸின் போது 7 இன்னிங்ஸ்களில் ஆடி 305 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 152.50 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 174.28 ஆகவும் உள்ளது. அதில் 4 முறை அரை சதம் அடித்துள்ளார். அதில் 20 முறை பவுண்டரிகளும் 22 முறை சிக்ஸர்களும் பறக்கவிட்டுள்ளார்.