Advertisment

"தோனிக்கு பிறகு சிறந்த கேப்டன் என்றால் இவர்தான்" - சேவாக் பேச்சு!

Sehwag

ஐபிஎல் தொடரில் தோனிக்கு பிறகு சிறந்த கேப்டன் என்றால் அது ரோகித் ஷர்மாதான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

Advertisment

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களுக்கான முதல் போட்டியை விளையாடி முடித்துள்ளன. தொடரின் ஐந்தாம் நாளான நேற்றைய முன்தினம் நடைபெற்ற போட்டியில், மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் சேவாக்கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "ஐபிஎல் தொடரில் தோனிக்கு பிறகு சிறந்த கேப்டன் என்றால் அது ரோகித் ஷர்மாதான். ஆட்டத்தை அவர் புரிந்துகொள்ளும் விதமும், அவர் வகுக்கும் வியூகங்களும் அற்புதமாக உள்ளது. ஒரு வீரருக்கு எதிராக யாரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறார்" எனக் கூறினார்.

Sehwag
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe