Skip to main content

"தோனிக்கு பிறகு சிறந்த கேப்டன் என்றால் இவர்தான்" - சேவாக் பேச்சு!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

Sehwag

 

ஐபிஎல் தொடரில் தோனிக்கு பிறகு சிறந்த கேப்டன் என்றால் அது ரோகித் ஷர்மாதான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களுக்கான முதல் போட்டியை விளையாடி முடித்துள்ளன. தொடரின் ஐந்தாம் நாளான நேற்றைய முன்தினம் நடைபெற்ற போட்டியில், மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "ஐபிஎல் தொடரில் தோனிக்கு பிறகு சிறந்த கேப்டன் என்றால் அது ரோகித் ஷர்மாதான். ஆட்டத்தை அவர் புரிந்துகொள்ளும் விதமும், அவர் வகுக்கும் வியூகங்களும் அற்புதமாக உள்ளது. ஒரு வீரருக்கு எதிராக யாரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறார்" எனக் கூறினார்.

 

 

Next Story

வரம்பு மீறிய சேவாக்! பக்குவமாக நடந்து கொண்ட மேக்ஸ்வெல்...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

Glenn Maxwell

 

 

13-ஆவது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி வீரரான மேக்ஸ்வெல், கே.எல்.ராகுல் வழிநடத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், 13 போட்டிகளில் விளையாடி 103 ரன்கள் மட்டுமே குவித்தார். மேலும், அதிரடிக்கு பெயர் பெற்ற இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இதனையடுத்து, அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் தன்னுடைய யூ-டியூப் சேனலில் பேசும்போது, மேக்ஸ்வெல்லை  விலையுயர்ந்த சியர்ஸ்லீடர் என்றும், அதிகம் ஊதியம் பெற்று விடுமுறையில் இருப்பவர் என்றும் குறிப்பிட்டார். சேவாக்கின் இந்தக் கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

இந்நிலையில், ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்த மேக்ஸ்வெல், "என்னை விரும்பாததை சேவாக் வெளிப்படையாகக் கூறிவிட்டார். அவர் கூற விரும்புவதைக் கூற அவருக்கு உரிமை உள்ளது. நான் அதை கடந்து போகிறேன். இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறேன். இது போன்ற விமர்சனங்களைக் கையாள்வதில் நான் கைத்தேர்ந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.

 

 

Next Story

ரோகித் ஷர்மாவை உருவகேலி செய்தாரா? சர்ச்சையான சேவாக் பேச்சு...

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

Rohit Sharma

 

 

ரோகித் ஷர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறிய கருத்து புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்  ‘Viru ki Baithak' என்ற பெயரில் முகநூலில் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில், ஐபிஎல் போட்டிகளில் அணிகளின் செயல்பாடு, வீரர்களின் செயல்பாடு மற்றும் வெற்றி, தோல்விக்கான காரணங்கள் குறித்து நகைச்சுவையாக அலசுகிறார். அந்த நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குறித்து சேவாக் கூறிய கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.

 

காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா கடந்த இரு போட்டிகளில் விளையாடவில்லை. இதுகுறித்து பேசிய சேவாக், ரோகித் ஷர்மா விளையாடவில்லை, வடபாவ் காயமடைந்தால் என்ன? அவர் இடத்தை சமோசாபாவ் எடுத்துக்கொண்டது என சவுரப் திவாரியை குறிப்பிட்டார்.

 

சேவாக்கின் இந்த கருத்தானது உருவகேலி செய்யும் வகையில் உள்ளது என்று கூறி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.