Skip to main content

பாண்டியாவை புகழ்கிறாரா? ராயுடுவை கலாய்க்கிறாரா? சேவாக் கருத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்...

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் இந்திய அணி ஆல் ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா குறித்து பேசுகையில், ஹர்டிக் பாண்டியாவின் திறனை அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் ஒப்பிட முடியாது என கூறியுள்ளார்.

 

sehwag interview about hardik pandya

 

 

இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த சேவாக்கிடம் ஹர்டிக் பாண்டியாவின் ஆட்ட திறன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஹர்டிக் பாண்டியா சிறந்த ஆல் ரவுண்டர். அவரின் திறனை அணியில் உள்ள மற்ற எந்த வீரர்களுடன் ஒப்பிட முடியாது. பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்படுகிறார். அவர் ஒரு சிறந்த 3 டைமன்ஷனல் பிளேயர். அவரை விட சிறந்த 3டி பிளேயர் இருந்திருந்தால் பிசிசிஐ கண்டிப்பாக அவரை தேர்ந்தெடுத்திருக்கும். அப்படி யாரும் இல்லாததால் தான் ஹர்டிக் பாண்டியாவை அணியில் எடுத்துள்ளனர்" என கூறினார்.

ஹர்டிக் பாண்டியாவை புகழ்ந்திருந்தாலும், இவரின் கருத்து ராயுடுவை கலாய்ப்பது போல உள்ளதாக இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர். உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது, இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அம்பதி ராயுடு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது விஜய் ஒரு 3டி பிளேயர் என பிசிசிஐ பதிலளித்தது. இதனை கலாய்க்கும் வகையில் ட்வீட் செய்திருந்த ராயுடு, "உலகக்கோப்பையை பார்க்க 3டி கிளாஸ் வாங்க போகிறேன்" என பதிவிட்டார். இதனை வைத்து ராயுடுவை இணையவாசிகள் தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் சேவாக்கின் இந்த கருத்தும் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

 

 

Next Story

வரம்பு மீறிய சேவாக்! பக்குவமாக நடந்து கொண்ட மேக்ஸ்வெல்...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

Glenn Maxwell

 

 

13-ஆவது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி வீரரான மேக்ஸ்வெல், கே.எல்.ராகுல் வழிநடத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், 13 போட்டிகளில் விளையாடி 103 ரன்கள் மட்டுமே குவித்தார். மேலும், அதிரடிக்கு பெயர் பெற்ற இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இதனையடுத்து, அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் தன்னுடைய யூ-டியூப் சேனலில் பேசும்போது, மேக்ஸ்வெல்லை  விலையுயர்ந்த சியர்ஸ்லீடர் என்றும், அதிகம் ஊதியம் பெற்று விடுமுறையில் இருப்பவர் என்றும் குறிப்பிட்டார். சேவாக்கின் இந்தக் கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

இந்நிலையில், ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்த மேக்ஸ்வெல், "என்னை விரும்பாததை சேவாக் வெளிப்படையாகக் கூறிவிட்டார். அவர் கூற விரும்புவதைக் கூற அவருக்கு உரிமை உள்ளது. நான் அதை கடந்து போகிறேன். இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறேன். இது போன்ற விமர்சனங்களைக் கையாள்வதில் நான் கைத்தேர்ந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.

 

 

Next Story

ரோகித் ஷர்மாவை உருவகேலி செய்தாரா? சர்ச்சையான சேவாக் பேச்சு...

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

Rohit Sharma

 

 

ரோகித் ஷர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறிய கருத்து புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்  ‘Viru ki Baithak' என்ற பெயரில் முகநூலில் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில், ஐபிஎல் போட்டிகளில் அணிகளின் செயல்பாடு, வீரர்களின் செயல்பாடு மற்றும் வெற்றி, தோல்விக்கான காரணங்கள் குறித்து நகைச்சுவையாக அலசுகிறார். அந்த நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குறித்து சேவாக் கூறிய கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.

 

காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா கடந்த இரு போட்டிகளில் விளையாடவில்லை. இதுகுறித்து பேசிய சேவாக், ரோகித் ஷர்மா விளையாடவில்லை, வடபாவ் காயமடைந்தால் என்ன? அவர் இடத்தை சமோசாபாவ் எடுத்துக்கொண்டது என சவுரப் திவாரியை குறிப்பிட்டார்.

 

சேவாக்கின் இந்த கருத்தானது உருவகேலி செய்யும் வகையில் உள்ளது என்று கூறி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.