Advertisment

இது நிச்சயம் வலி தரக்கூடியது தான்- சேவாக் உருக்கம்...

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி நான்காவது இடத்திற்கான வீரர் இன்றி அவதிப்பட்ட போது, இந்திய அணியில் 4-வது இடத்துக்கு சரியான வீரர் அம்பதி ராயுடுதான் என்று ரசிகர்கள் முதல் கோலி வரை அனைவரும் தெரிவித்தனர்.

Advertisment

sehwag about ambati rayudu retirement

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்ம், சர்ச்சை ட்வீட் என பல காரணங்களால் இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படாமலேயே போனார். அதன் பின் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் காயமடைந்த நிலையில் கூட இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனாலும் ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Advertisment

இந்நிலையில் நேற்று திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரின் ஓய்வு குறித்து பல இந்திய ரசிகர்களும், வீரர்களும், முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுகுறித்து கூறியுள்ள முன்னாள் இந்திய அணி வீரர் சேவாக், "உலகக்கோப்பைக்கு ராயுடுவை தேர்வு செய்யாமல் புறக்கணித்தது நிச்சயமாக வலியை தரக்கூடிய ஒரு விஷயம். இதன் பின் கண்டிப்பாக அவரது வாழ்க்கையில் சிறப்பானவைகள் கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.

virender sehwag ambati rayudu icc worldcup 2019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe