Advertisment

"வயதானவர்கள் அணி" - சென்னை அணி குறித்து ஸ்டைரிஸ் கருத்து!

csk players

13 -ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 7 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Advertisment

எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வென்றாலும், பிற அணிகளின் வெற்றி மற்றும் தோல்விகளை அடிப்படையாக வைத்தே சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்பட இருக்கிறது. தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் உள்ள பிற அணிகள் அசுர பலத்துடன் வலுவான நிலையில் உள்ளதால், சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கிரிக்கெட் வல்லுநர்களால் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டைரிஸ் சென்னை அணி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். இதைக் கூறுவதற்கே கடினமாக உள்ளது. கடைசியாக ஃபிளம்மிங் கொடுத்த பேட்டியில் இருந்தே நீங்கள் அதைக் கூறிவிடலாம். தற்போதைய அணியின் காலம் முடிந்துவிட்டது. அணியில் வயதானவர்கள் நிறைந்துவிட்டனர் எனக் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூறிவருகிறோம். வயது முதிர்ந்தவர்களைக் கொண்டு விளையாடும் போது, சில நேரங்களில் சறுக்க நேரிடும். அந்த வகையில் இந்த வருடம் அமைந்துவிட்டது" எனக் கூறினார்.

CSK ipl 2020
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe