style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி அங்கு ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் களமிறங்கியது. இந்தத் தொடரில் 5 - 0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, புலவாயோவில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது முதன்முறையாக பந்துவீசினார். சர்வதேச போட்டிகளில் சர்ஃபராஸ் பந்துவீசுவது இதுவே முதன்முறை என்பதால் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கவீரர் ஃபகர் ஸமானிடம் கீப்பிங் க்ளவுஸுகளைக் கொடுத்த சர்ஃபராஸ், போட்டியின் 48 மற்றும் 50-ஆவது ஓவர்களை வீசினார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
முதல் ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த சர்ஃபராஸ், நம்பிக்கையுடன் வீசிய அடுத்த ஓவரில் பீட்டர் மூர் மிட்-விக்கெட் திசையில் அதிரடியாக சிக்ஸர் அடித்தார். இதன்மூலம், சர்ஃபராஸ் 2 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் கொடுத்தார்.
இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதன்முறையாக பந்துவீசினார். அந்த ஓவரிலேயே ட்ராவிஸ் டௌவ்லினை கிளீன் பவுல்டாக்கி சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டைப் பதிவு செய்தார். சர்ஃபராஸ் அகமது தோனியைக் காப்பியடிக்கப்போய் தோற்றுவிட்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.