"துவக்கத்தில் சந்தேகமாக இருந்தது... இப்போது நிரூபித்துவிட்டார்" இந்திய வீரர் குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் பேச்சு

Sanjay Manjrekar

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. முதல் இரு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில்76 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்திய இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர் ஹர்திக் பாண்டியா குறித்துப் பேசுகையில், "ஐபிஎல் போட்டிகளின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து அவரை இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யும் போது எனக்கு சந்தேகமாக இருந்தது. அவர் 20 ஓவர் போட்டிகளில் சிறந்த வீரர். ஆனால், ஒருநாள் போட்டி அதிலிருந்து சற்று மாறுபட்டது. தான் ஒருநாள் போட்டிக்கான வீரராகவும் செயல்பட முடியும் என நம் அனைவரிடமும் நிரூபித்துவிட்டார். இந்திய அணி 6-ஆவது இடத்தில் விளையாடுவதற்கான வீரரைக் கண்டுபிடித்துவிட்டது. அவர் பந்துவீசுகிறாரோ இல்லையோ இந்திய அணிக்கு 5 அல்லது 6-ஆவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கான சரியான வீரர் கிடைத்துவிட்டார் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.

Hardik pandya india vs Australia Sanjay Manjrekar
இதையும் படியுங்கள்
Subscribe