Skip to main content

சச்சின் ஓனர்... விஜய்சேதுபதி தூதர்... களமிறங்கும் ‘தமிழ் தலைவாஸ்’…

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

2017–ஆம் ஆண்டு ப்ரோ கபடி சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் தலைவாஸ், இந்த ஆண்டு பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது. சென்ற முறை அனுபவமிக்க வீரர்கள் இல்லாமல் தடுமாறிய அணிக்கு பலம் சேர்க்க, இந்த முறை நல்ல அனுபவமிக்க வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், கபடியை இன்னும் அதிகமாக தமிழ் மண்ணில் பிரபலபடுத்தும் நோக்கில், நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி ப்ரோ கபடி தொடருக்கான தமிழக தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

dd

 

 

ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் பிரசாத், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், தெலுங்கு திரையுலகை சார்ந்த அல்லு அர்ஜுன், சிரஞ்சிவி மகன் ராம் சரண் மற்றும் சினிமா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோர் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக உள்ளனர். விவோ ப்ரோ கபடி 6-வது சீசனுக்கான ஏலம் கடந்த  மே மாதம் நடைபெற்றது.  இதில் 58 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 422  வீரர்கள் கலந்து கொண்டனர்.  ஏலத்தில் 12  அணிகளும் குறிப்பிட்ட வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டனர். தமிழ் தலைவாஸ் அணியானது, இந்திய அணியின் கேப்டன் அஜய் தாகூர், அமித் ஹூடா, சி அருண் மற்றும் டி பிரதீப் ஆகியோரை தக்கவைத்துக்கொண்டது.

 

2017-ஆம் ஆண்டு கமல்ஹாசன் தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக இருந்தார். இந்த வருட தூதராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட்டை தாண்டி கபடியை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும், ப்ரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி பங்குபெரும் மைதானத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து தமிழ் தலைவாஸ் அணியை உற்சாகப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார். 

 

pp

 

தக்கவைத்துக்கொண்ட நான்கு வீரர்கள் தவிர 16 வீரர்களை தமிழ் தலைவாஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த காசிநாத பாஸ்கரன்,  இந்த ஆண்டு டெக்னிக்கல் டைரக்ட்டராக செயல்படுவார். இவர் 2016 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு புதிய பயிற்சியாளராக கேரளாவை சேர்ந்த எடச்சேரி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சீசன்களில் யு மும்பா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டவர். இந்த சீசனில் அனுபவமுள்ள வீரர்கள் மற்றும் இளம் வீரர்களைக்  கொண்டு தமிழ் தலைவாஸ் அணி களமிறங்குகிறது. இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டரான மன்ஜீத் சில்லர் மற்றும் ரைடர் ஜஸ்விர் சிங் போன்ற அனுபவமுள்ள வீரர்களுடனும், அமித் ஹூடா, சி அருண், டி பிரதீப் மற்றும் சுர்ஜீத் சிங் ஆகிய இளம் வீரர்களுடனும், புத்தம் புது பொலிவுடன் இந்த சீசனில் விளையாடுகிறது தமிழ் தலைவாஸ்.  ரைடிங்கை  பொறுத்தவரையில் கடந்த ஆண்டைவிட சிறப்பாக உள்ளது. அஜய் தாகூர், சுகேஷ் ஹெக்டே, சுர்ஜீத் சிங்,  ஜஸ்விர் சிங் போன்ற அனுபவமுள்ள வீரர்கள் மற்றும் அணில் குமார், ஜெயசீலன் போன்ற இளம் வீரர்கள்  இடம் பெற்றுள்ளனர். டிபன்டர் வீரர்களில் அமித் ஹூடா, சி அருண், டி பிரதீப், ஜே தர்சன்,  சுனில் குமார் மற்றும் டி கோபு ஆகியோர் குறிப்பிடத்தகுந்த வீரர்கள். ஆல் ரவுண்டர்களாக  மன்ஜீத் சில்லர் மற்றும் கொரிய வீரரான சான் சிக் பார்க் ஆகியோர் களமிறங்குவார்கள்.

 

pp

 

கேப்டன் அஜய் தாகூர் இதுவரை 80 போட்டிகளில் 529 ரைட் பாயிண்ட்கள் மற்றும் 20 டேக்கல் பாயிண்ட்கள் எடுத்து உள்ளார். ப்ரோ கபடி அனைத்து தொடர்களிலும் சேர்த்து நான்காவது அதிகமான ரைட் பாயிண்ட்கள் எடுத்த வீரராக உள்ளார்.   ஜஸ்விர் சிங், சுகேஷ் ஹெக்டே மற்றும் சுர்ஜீத் சிங் ஆகியோரும் அதிகளவு ரைட் பாயிண்ட்கள் எடுத்துள்ளனர். டிபன்டர்களில் அமித் ஹூடா 54 போட்டிகளில் 144 டேக்கல் பாயிண்ட்கள் எடுத்து உள்ளார். சுனில் குமார், இளம் வீரர்களான சி அருண் மற்றும் ஜே தர்சன் ஆகியோரும் அதிகளவு டேக்கல் பாயிண்ட்கள் எடுத்துள்ளனர். ஆல் ரவுண்டரான மன்ஜீத் சில்லர் 74 போட்டிகளில் 212 ரைட் பாயிண்ட்கள் மற்றும் 243 டேக்கல் பாயிண்ட்கள் எடுத்து உள்ளார். ப்ரோ கபடி தொடரின் நம்பர் 1 டிபன்டர் மன்ஜீத் சில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தலைவாஸ் அணியின் பலம்:
•    அனுபவமுள்ள ரைடர்கள் மற்றும் டிபன்டர்கள்
பலவீனம்:
•    ஒரே ஒரு ஆல் ரவுண்டர் மட்டுமே இருப்பது 

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர். 

Next Story

விராட் கோலி சாதனை குறித்து சச்சின் நெகிழ்ச்சி!

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Sachin excited about Virat Kohli's feat

 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா -  நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

 

இதனையடுத்து வந்த விராட் கோலி நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த கோலி 80 ரன்கள் எடுத்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் ஏறத்தாழ 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி சதத்தை கடந்தார். இதன் மூலம் சச்சினின் மற்றொரு சாதனையான ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) விளாசிய வீரர் எனும் சாதனையையும் முறியடித்து 50 ஆவது சதத்தை கடந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

 

இந்நிலையில் விராட் கோலி சாதனைக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலியின் ரோல் மாடலும், அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரான, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சச்சின், விராட் கோலியைப் பாராட்டியுள்ளார்.  தனது சமூக வலைத்தளப் பக்கமான எக்ஸ் தளத்தில் "இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும், திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ சிறந்த வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

 

Sachin excited about Virat Kohli's feat

 

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட என்க்கு பெரிய மகிழ்ச்சி எதுவும் கிடையாது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில் அதைச் செய்ததும், மேலும் எனது சொந்த மைதானத்தில் இது நடந்தது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது”என பதிவிட்டுள்ளார்.