Skip to main content

செஸ் போட்டிகளில் அசத்தும் 4 வயது சிறுமி! 

Published on 28/07/2018 | Edited on 28/07/2018

தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் 4 வயது சிறுமி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

 

Saanvi

 

 

 

சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி சான்வி அகர்வால். சென்ற ஆண்டு முதல் செஸ் விளையாடத் தொடங்கிய சிறுமி சான்வி, அவரது பெற்றோரின் ஊக்கத்தால் அடுத்தடுத்த கட்டங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளார். கணினி மூலம் செஸ் விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுத்தந்த சான்வியின் பெற்றோர், கணினியில் இருக்கும் செஸ் விளையாட்டின் பல்வேறு படிநிலைகளை சுலபமாக வெற்றிகொள்வதைக் கண்டு வியந்துள்ளனர். அப்படியே விடாமல் தொடர்ந்து அவரை பயிற்சியாளரிடம் அனுப்பியதன் விளைவாக, தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் சான்வி சாதனை படைக்கிறார்.

 

இந்நிலையில், அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பின் சார்பில் கர்நாடகாவில் நடத்தப்பட்ட 32-ஆவது தேசிய பெண்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏழு வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சான்வி நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து பேசும் சான்வியின் பயிற்சியாளர் நிதின் ரத்தோர், செஸ் விளையாட்டில் அட்டாக்கிங் முவ் எடுப்பதுதான் முக்கியமானது. அது சான்விக்கு சர்வசாதாரணமாக வருகிறது. இதே வேகத்தில் சென்றால் ஆசிய, உலக சாம்பியன் பட்டங்களையும் அவரால் வெல்லமுடியும் என்கிறார்.  

 

 

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.