இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட்போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ்வென்றஇந்திய அணி, முதலில் பேட்டிங்செய்து வருகிறது.
சுப்மன்கில், புஜாரா, விராட்கோலிஆகியோர்விரைவில் ஆட்டமிழந்தாலும், அதிரடியாக ஆடியரோகித்சர்மாசதமடித்தார். டெஸ்ட்கிரிக்கெட்டில், இது அவரது7வது சதமாகும். இந்த சதத்தின்மூலம், இதுவரை யாரும் செய்யாதசாதனையையும் செய்துள்ளார் ரோகித்.
ஏற்கனவே இங்கிலாந்திற்கெதிராக ஒருநாள், இருபது ஓவர்போட்டிகளில் சதமடித்துள்ள ரோகித், இன்று இங்கிலாந்திற்கெதிராக டெஸ்ட்போட்டிகளிலும் சதமடித்துள்ளார். இதன்மூலம் நான்கு அணிகளுக்கு எதிராக, கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மட்டிலும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ரோகித்சர்மாஏற்கனவே இலங்கை, தென் ஆப்பிரிக்கா, விண்டீஸ்(மேற்கிந்திய தீவுகள்) ஆகிய அணிகளுடன், மூன்றுஃபார்மட்டிலும் சதமடித்துள்ளார்.