Advertisment

சாதனைப் பட்டியலில் இணைய காத்திருக்கும் ரோகித் ஷர்மா!

Rohit Sharma

Advertisment

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது முதல் மூன்று போட்டிகளை விளையாடி முடித்துள்ளன. ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா இன்னும் இரண்டு ரன்கள் எடுத்தால், ஐ.பி.எல் தொடரில் 5,000 ரன்களைக் குவித்த வீரர்கள் எனும் பட்டியலில் இணைவார்.

ஐ.பி.எல் தொடரில் 5,000 ரன்கள் எடுப்பது என்பது தற்போது வரை ஒரு மைல்கல்லாக உள்ளது. சென்னை அணியைச் சேர்ந்த ரெய்னா, முதல்முதலாக இதை எட்டிப்பிடித்தார். இரண்டாவதாக பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி இதைச் சாத்தியமாக்கினார். தற்போது, இவர்களுடன் இந்தப் பட்டியலில் இணைவதற்கான வாய்ப்பு மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மாவிற்கு உருவாகியுள்ளது. அவர் 191 போட்டிகளில் விளையாடி, 4,998 ரன்களைக் குவித்துள்ளார். இன்னும் இரு ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் அடுத்து வரும் போட்டியிலேயே ரோகித் ஷர்மா இந்த சாதனைப் பட்டியலில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit sharma
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe