Advertisment

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்? - வெளியான புதிய தகவல்!

team india

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இலங்கையுடன் மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளும் மோதும் இருபது ஓவர் தொடர் இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisment

அதனைத் தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. மார்ச் 12 ஆம் தேதி இந்தியா, இலங்கையிடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி, அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

மேலும் அப்போது இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நிர்வாகிகள், அணி தேர்வாளர்கள், பயிற்சியாளர் ட்ராவிட் ஆகியோர் ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க விரும்புவதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe