Advertisment

சிக்சரில் சாதனை படைக்க காத்திருக்கும் டான் ரோகித்!

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய துவக்க வீரர் ரோகித் ஷர்மா ஒரே ஒரு சிக்சர் அடிக்கும் பட்சத்தில் புது மைல்கல்லை எட்டவுள்ளார். இப்போட்டியில் ரோகித் ஷர்மா 1 சிக்சர் அடிக்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். அப்படி எட்டும்பட்சத்தில் இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமை பெறுவார் ரோகித். தவிர சர்வதேச அளவில் இந்த சாதனையை படைக்கும் மூன்றாவது வீரராவார் ரோகித்.

Advertisment

இப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் (534 சிக்சர்கள்) முதலிடத்திலும், முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி (476 சிக்சர்கள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சர்வதேச அரங்கில் 500 சிக்சர்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் கிறிஸ் கெயில் தான்.

Advertisment
Rohit
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe