Skip to main content

2021 ஆம் ஆண்டின் ஐசிசி டெஸ்ட் அணியின் மூன்று இந்திய வீரர்கள்!

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

team india

 

சர்வதேச கிரிக்கெட் வாரியம், 2021 ஆம் ஆண்டிற்கான ஆடவர் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இந்த அணியில், ரோகித் சர்மா, அஸ்வின், ரிஷப் பந்த் ஆகிய மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

ரோகித் சர்மா, கடந்தாண்டு இரண்டு சதங்களோடு 906 ரன்கள் குவித்து அசத்தினார். கடந்தாண்டு அவரது சராசரி 47.68 ஆகும். அதேபோல் ரிஷப் பந்த், 12 போட்டிகளில் 39.36 சராசரியில் 748 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதமும் அடங்கும். இந்த அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்திய வீரான அஸ்வின், 9 போட்டிகளில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். கடந்தாண்டு அவரது பந்துவீச்சு சராசரி 16.64 ஆக இருந்தது. மேலும் அஸ்வின் சதமும் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2021 ஆம் ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் அணி வருமாறு;  திமுத் கருணாரத்னே (இலங்கை), ரோகித் சர்மா (இந்தியா), கேன் வில்லியம்சன் (கேப்டன், நியூசிலாந்து), மார்னஸ் லாபுஷேன் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஃபவாத் ஆலம் (பாகிஸ்தான்), ரிஷப் பந்த் (இந்தியா), ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா), கைல் ஜேமிசன் (நியூசிலாந்து), ஷாஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), மற்றும் ஹசன் அலி (பாகிஸ்தான்). 

 

 

Next Story

கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த ரோஹித்; அதிரடியாக ஆடி வரும் இந்திய அணி!

Published on 08/03/2024 | Edited on 09/03/2024
Rohit's uncanny century-scoring partnership; The Indian team is swinging in action!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Rohit's uncanny century-scoring partnership; The Indian team is swinging in action!

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த  ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர். ஒரே ஓவரில் மூன்று சிக்சர்களைப் பறக்க விட்ட ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும் மற்றும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இங்கிலாந்துக்கு எதிராக இது 4 ஆவது சதமாகும். இதன் மூலம் தொடக்க ஆட்டக்காரராக இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் எனும் இந்திய முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார்.ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் இணை அதிரடியாக ஆடி வருகிறது. தற்போது இந்திய அணி 72 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 7 பவுண்டரிகளுடன் படிக்கல் 31 ரன்களுடனும், சர்பிராஸ் 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.