Advertisment

"என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம்" -ரோகித் ஷர்மா பேச்சு

Rohit Sharma

Advertisment

என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம் என மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா வெற்றி குறித்துபேசுகையில் கூறியுள்ளார்.

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய இப்போட்டியில், மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஆறாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

போட்டியின் முடிவில் வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, "இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுதான் மும்பை அணியின் சிறந்த ஆட்டம் என்று நினைக்கிறேன். பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது. என்ன செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். அதற்கான சரியான முடிவும் கிடைத்துள்ளது" எனக் கூறினார்.

Advertisment

மேலும் டிரண்ட் பவுல்ட் காயம் குறித்துப் பேசுகையில், "அவர் நலமாக இருப்பதுபோல் தான் உள்ளது. இதைபெரிய பிரச்சனையாக கருதவில்லை. இறுதி போட்டிக்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. அதற்குள் அவர் குணமாகிவிடுவார்" எனக் கூறினார்.

வரும் 10-ம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிற இறுதி போட்டிக்காக மும்பை அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

ipl 2020 Rohit sharma
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe