Advertisment

சென்னை-மும்பை போட்டி குறித்து என்ன சொல்கிறார் ரோகித் ஷர்மா??? 

Rohit Sharma

13-வது ஐபிஎல் தொடரானது இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு அமீரகத்தில் தொடங்குகிறது. தொடக்க போட்டியாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியைக் குறிவைத்து தீவிர பயிற்சியில் உள்ளனர். சென்னை அணியின் கேப்டனான தோனியின் சர்வதேச ஓய்வு அறிவிப்பிற்கு பிறகு நடக்கும் முதல் போட்டி என்பதால் இப்போட்டி குறித்தான எதிர்பார்ப்பு கூடுதலாக அதிகரித்துள்ளது. கடும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெறும் இப்போட்டி குறித்து மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "சென்னை அணி ஐபிஎல் தொடர்களில் உள்ள சிறந்த அணிகளுள் ஒன்று. அவர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் பெரும் உத்வேகத்துடன் களமிறங்குவார்கள். கடந்த சில மாதங்களாக நாம் அனைவருமே கிரிக்கெட் விளையாடவில்லை. எனவே அனைவரும் வெற்றியுடன் துவக்க விரும்புவோம். சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சிறந்த போட்டியை எதிர்பார்க்கலாம். ஒரு அணியாக இணைந்து நாம் என்ன செய்யவேண்டுமோ அதில் கவனம் செலுத்துகிறோம்" எனக் கூறினார்.

Advertisment

Rohit sharma
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe