Advertisment

விரைவில் களம் திரும்பும் ரோகித் சர்மா!

rohit sharma

இந்திய ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா அண்மையில் நியமிக்கப்பட்டார். அதேபோல் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட்டார். ஆனால் பயிற்சியின்போதுஏற்பட்ட காரணமாக, அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.

Advertisment

இந்தநிலையில்ரோகித் சர்மாவின் காயம் குணமடைந்து வருவதாகவும், அடுத்த மாதம் ஆறாம் தேதி தொடங்கவுள்ள மேற்கு இந்திய தீவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா களமிறங்கும் பட்சத்தில், அது முழுநேர கேப்டனாக அவர் இந்திய அணியை தலைமை தாங்கும் முதல் தொடராக இருக்கும்.

Advertisment

இதற்கிடையே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவையும், துணை கேப்டனாக கே.எல் ராகுலையும்நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe