ADVERTISEMENT

கண்ணீருடன் டென்னிஸிலிருந்து விடைபெற்ற ரோஜர் ஃபெடரர்

08:46 AM Sep 24, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

லண்டனில் நடந்த லேவர் கோப்பை தொடருடன் ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் களத்தில் இருந்து விடை பெற்றார்.

ADVERTISEMENT

ஐரோப்பிய அணியில் இடம் பெற்றிருந்த ரஃபேல் நடாலும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரரும் இணைந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் சாக்- பிரான்ஸஸ் டியோபோ இணையுடன் மோதியது. ஆடவர் இரட்டை போட்டியாக நடந்த இந்த ஆட்டத்தில் ஆரம்ப செட்டை நடால் இணை 6-4 என்ற கணக்கில் தங்கள் வசப்படுத்தினர். ஆனால் அடுத்த செட்டை கவனமுடன் விளையாடிய அமெரிக்க இணை 7-6 என்ற கணக்கில் தங்கள் வசப்படுத்தியது. இதனால் இறுதி செட்டில் விறுவிறுப்பு கூடிய நிலையில் ஆட்டம் வெகு நேரம் நீடித்தது. இறுதியில் 9-11 என்ற கணக்கில் ஃபெடரர்- நடால் இணை போராடி தோல்வி அடைந்தது.

கடைசி போட்டியில் விளையாடிய பின் பேசிய ஃபெடரர், தனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அவரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர் ரஃபேல் நடாலும், ரசிகர்களும்.

ரஃபேல் நடாலுடன் இணைந்து கடைசிப் போட்டியில் ரோஜர் ஃபெடரர் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT