ஓய்வை அறிவித்தார் ராபின் உத்தப்பா

Robin Uthappa announced his retirement!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ராபின் உத்தப்பா, அனைத்து வகையான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது 36 வயதாகும் ராபின் உத்தப்பா, கடந்த 2004- ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பை போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 2006- ஆம் ஆண்டு சீனியர் அணியில் இடம் பிடித்த அவர், இந்திய அணிக்காக 46 ஒருநாள் போட்டிகள், 13 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2007- ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒரு அங்கமாக அவர் விளங்கியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்
Subscribe