Skip to main content

என் அப்பாவும் தோனி கையால் அவுட்டாகியுள்ளார், நானும் அவுட் ஆகிவிட்டேன்- இளம் வீரர் பகிர்ந்த சுவாரசிய தகவல்...

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

கடந்த 11 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியில் அறிமுகமானார் 17 வயதான ரியான் பராக். சிஎஸ்கே அணிக்கு எதிரான  போட்டியில் விளையாடிய பராக் 16 ரன்கள் சேர்த்திருந்த போது, தோனி கையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

 

riyan parag shares an interisting incident of his father got out by dhoni

 

 

அதன்பின் அந்த ஆட்டம் முடிந்த பிறகு தோனியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது பராக் பற்றிய ஒரு சுவாரசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தோனியின் கையால் அவுட் ஆனது பராக் மட்டுமல்ல, பராக்கின் தந்தையும் தோனி கையால் ஆட்டமிழந்துள்ளார் என்பது தான் அந்த சுவாரசிய தகவல். 1999-2000 ஆண்டுகளில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் தோனி பீகார் அணிக்காக விளையாடினார். அப்போது பராக்கின் தந்தை வடகிழக்கு அணிக்காக விளையாடியுள்ளார். அப்போது பராக்கின் தந்தையை தோனி ஸ்டம்பிங் செய்து அவுட் ஆக்கியுள்ளார். அப்பா, மகன் என இருவரையும் தோனி அவுட் ஆக்கிய இந்த சுவாரசிய தகவல் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.   

hjnhcgjgj