சர்வதேச கிரிக்கெட்வாரியம், ஒரு ஆண்டில்சிறப்பாக விளையாடும்வீரர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கிவருகிறது. இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட்வாரியம், மாதந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களைப் பாராட்டும் வகையில், மாதத்திற்கான சிறந்த வீரர் விருதைஜனவரிமாதத்திலிருந்து வழங்க முடிவுசெய்துள்ளது.
தற்போது இந்த விருதுக்கு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரானடெஸ்ட்தொடரை கைப்பற்றக்காரணமாய் விளங்கியஇந்தியவீரர் ரிஷப்பந்த், இலங்கையுடனான போட்டியில்சிறப்பாக விளையாடி ரன்குவித்தஜோரூட், ஜனவரிமாதம் ஐந்து ஒருநாள்போட்டிகளில் விளையாடி மூன்று சதம் அடித்த, அயர்லாந்தின்பால் ஸ்டிர்லிங் ஆகியோர்பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது பரிந்துரைக்கப்பட்ட வீரர்களில், விருதுக்குத் தகுதியான வீரர் வாக்குகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். மூத்த விளையாட்டு ஊடகவியாளர்கள், முன்னாள் கிரிக்கெட்வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஐசிசிஹால் ஆஃப்பேமில்(icc hall of fame) இடம்பெற்றவர்கள் ஆகியோர்அடங்கியகுழு ஒன்றும், கிரிக்கெட்ரசிகர்களும் வாக்களித்து மாதத்திற்கான சிறந்தவீரரை தேர்வு செய்யவுள்ளனர்.