Advertisment

"இது ரொம்ப அதிகம்" - ட்ரோல்களால் கடுப்பான ரிக்கி பாண்டிங்!

ricky ponting pant

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயானமூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடியஆஸ்திரேலியா 338 ரன்கள்எடுத்தது. அதன்பிறகு ஆடிய இந்தியஅணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 312ரன்கள் குவித்துடிக்ளர் செய்து, இந்தியாவிற்கு 407 ரன்களைஇலக்காகநிர்ணயித்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து பேசியரிக்கிபாண்டிங், “இந்தியஅணி தனதுஇரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களை கூட எடுக்காது எனநினைக்கிறேன்” என்று கூறினார். இந்நிலையில், இரண்டாவது நாளானஇன்று ரிஷப்பந்தின் அதிரடி ஆட்டத்தாலும், புஜாராவின்நிதானமான ஆட்டத்தாலும் இந்தியஅணி 200 ரன்களைக் கடந்தது. இதையடுத்து, இந்தியா 200 ரன்களைக் கூட தொடாதுஎனசொன்னரிக்கிபான்டிங்கை வீரேந்திரசேவாக், தொடங்கி இந்தியரசிகர்கள் வரை அனைவரும் கிண்டல் செய்ய தொடங்கினர். சேவாக், பாண்டிங்கைரிஷப்பந்த் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் புகைப்படத்தைபதிவிட்டுட்ரோல்செய்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், தன் மீதான ட்ரோலுக்கு, ரிக்கிபாண்டிங்தனதுட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். "இந்தியா 200 ரன்களுக்குக் குறைவாகஎடுக்கும்என்ற கணிப்புக்கு இது ரொம்ப அதிகம். நான் எதிர்பார்த்தஅளவிற்கு பிட்ச்இன்னும் மோசமாகவில்லை. ரிஷப்பந்த் விளையாடிய விதம் எனக்குபிடித்திருந்தது. இந்த சூழ்நிலைக்கு அவர் ஆடியவிதம்தான்சரியானதாகும்" எனகூறியுள்ளார்.

indvsaus ricky ponting rishabh pant virender sehwag
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe