Advertisment

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ!

ipl 2021

இந்தியாவில் கரோனாபாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள்சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனாபாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.ஆனாலும், கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சாஹா, டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கரோனாஉறுதியானது. மேலும், சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும் கரோனாஉறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் செப்டம்பர் 16 முதல் 20ஆம் தேதிகளுக்குள் தொடங்கி, அக்டோபர் 9 அல்லது 10ஆம் தேதியில் முடிவடையும் என தகவல்கள் வெளியாகின. மேலும், மீண்டும் தொடங்கவுள்ள இந்த ஐபிஎல் தொடர், கடந்தமுறை போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்எனவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மே 29ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகுவெளியாகும் எனவும் அத்தகவல்கள் தெரிவித்தன.

Advertisment

இந்தநிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளைஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடத்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகஇந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த வருடம் இந்தியாவில் நடப்பதாக இருக்கும் இருபது ஓவர் உலகக் கோப்பையைத் தள்ளிவைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜூன் 1ஆம் தேதி கூடி முடிவெடுப்பதாக இருந்தது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்அந்தக் கூட்டத்தை ஜூலை முதல் வாரம்வரை தள்ளிவைக்குமாறுகோரவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகஇந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

bcci uae IPL ipl 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe