rcb

Advertisment

கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இத்தொடரானது தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாகியுள்ளனர். அதேபோல அனைத்து அணிவீரர்களும் பயிற்சிக்காக அமீரகத்தில் தற்போது முகாமிட்டுள்ளனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பி.சி.சி.ஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் அமீரகம் வந்தடையும் வீரர்கள், அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பிறகுதான் அவர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது முக்கியமான கட்டுப்பாடு. அதன்படி அமீரகம் சென்ற அனைத்து வீரர்களும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் ராஜஸ்தான், பஞ்சாப் அணி வீரர்கள் தங்களது பயிற்சியைசில தினங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டனர். அதனையடுத்து தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களும் இந்தாண்டு கோப்பையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்போடு தீவிரப் பயிற்சியில் இறங்கியுள்ளனர்.