Skip to main content

இறந்த தாயார் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசிய ரஷீத் கான்!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Rashid Khan

 

 

டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருதினை வென்ற ரஷீத் கான் இறந்த தன் தாயார் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவரின் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களைக் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக பெர்ஸ்டோவ் 48 பந்துகளில் 53 ரன்களும், கேப்டன் டேவிட் வார்னர் 33 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர்.

 

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் முன்னணி வீரர்கள் ரஷீத் கானின் சுழலில் சிக்கினர். 20 ஓவரின் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களைக் குவித்தது. இதனால், ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்கு ஓவர்கள் பந்துவீசி, 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரஷீத் கானிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

 

ஆட்டநாயகன் விருது பெற்றுவிட்டு ரஷீத் கான் பேசுகையில், "கடந்த ஒன்றரை வருடம் எனக்கு கடினமான காலமாக அமைந்தது. முதலில் என் அப்பா இறந்தார். அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் என் அம்மா இறந்துவிட்டார். இதிலிருந்து மீண்டு வருவதற்கு சற்று காலம் எடுத்தது. என்னுடைய அம்மாதான் எனது தீவிர ரசிகை. குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் சொல்லலாம். நான் ஆட்டநாயகன் விருது வென்றால், அன்று இரவெல்லாம் அது குறித்து என்னிடம் பேசுவார்" எனக்கூறி உணர்ச்சிவயப்பட்டார்.

 

 

Next Story

‘மும்பைக்கு மரண பயத்தைக் காட்டிய ரஷித்’ - நல்வாய்ப்பாக வென்ற மும்பை

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

'Rashid who showed Mumbai the fear' was a good win for Mumbai

 

16 ஆவது ஐபிஎல் லீக் தொடரின் 57 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்களை எடுத்தது. இது குஜராத் அணிக்கு எதிராக ஒரு அணி பதிவு செய்யும் அதிகபட்ச ஸ்கோராகும். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 103 ரன்களை எடுத்தார். ஐபிஎல் போட்டிகளில் அவரது முதல் சதம் இதுவாகும். குஜராத் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

 

அதிகபட்சமாக ரஷித் கான் 79 ரன்களை குவித்தார். மும்பை அணி சார்பில் ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்களையும் பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். நடப்பு சீசனில் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பியூஷ் சாவ்லா 17 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஜடேஜா 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் குஜராத் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரஷித் கான் இன்று மட்டும் 10 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். 

 

இன்றைய போட்டியில் ரஷித் கானுக்கு கை கொடுக்க ஒரு வீரர் இருந்திருந்தால் கட்டாயம் குஜராத் வெற்றி பெற்றிருக்கும் என்பது நிதர்சனம். தனியாக போராடி ஆட்டத்தை பரபரப்பாக்கிய ரஷித், கை கொடுக்க இணை இருந்திருந்தால் ஆட்டத்தை குஜராத் அணிக்கு சாதகமாக முடித்து வைத்திருப்பார்.

 

 

Next Story

இரண்டு வீரர்களை 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்த அகமதாபாத் அணி

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

ipl

 

கரோனா பரவல் காரணமாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தள்ளிப்போக வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், ஐபிஎல் அணி நிர்வாகங்கள் தங்கள் அணியைக் கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன்னதாகவே மூன்று வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்பதால், இரு அணிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

 

இந்தநிலையில் அகமதாபாத் அணி, ஹர்திக் பாண்டியாவையும், ரஷித் கானையும் 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அந்த அணி சுப்மன் கில்லை 7 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஹர்திக் பாண்டியா, அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.