Skip to main content

அணியில் சேர அட்ஜெஸ்ட்மெண்ட்! - கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டால் பரபரப்பு

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
Cric

விராட் கோலி, ராஜீவ் சுக்லாவுடன் முகமது அக்ரம் சைஃபி (இடது)

 

 

 

கிரிக்கெட் அணியில் சேர விலைமாதுக்களை கூட்டி வரவேண்டும் என முக்கிய பொறுப்பிலிருக்கும் ஒருவரின் உதவியாளர் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ஐ.பி.எல். சேர்மனாக இருப்பவர் ராஜீவ் சுக்லா. இவரது உதவியாளராக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் முகமது அக்ரம் சைஃபி, உத்தரப்பிரதேசம் மாநில கிரிக்கெட் வாரியத்தில் எந்தப் பொறுப்புகளில் இல்லையென்றாலும், அதிக செல்வாக்கு உள்ளவர். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் அணியில் மீண்டும் சேர்ந்து விளையாட வேண்டும் என கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா சைஃபியிடம் கோரியுள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த சைஃபி, ராகுல் சர்மாவிடம் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு விலைமாதுக்களை அழைத்துவருமாறு வலியுறுத்தியுள்ளார். 
 

இதுதொடர்பான செய்திகள் இந்தி ஊடகத்தில் வெளியாகின. அதில், ராகுல் சர்மா - சைஃபி இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடளுக்கான ஆடியோ வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில், சைஃபி பெண்களைத் தயார் செய்து லாட்ஜிக்கு அனுப்பவேண்டும் என்றும், பணம் செலவாகும் என்றும் சொல்ல, அடுத்த ஆடியோவில் இன்னும் சில போட்டிகளுக்குப் பிறகு அணியில் சேருவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் எனக் கூறுகிறார். 
 

 

 

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சைஃபி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவில்லை எனக்கூறியுள்ள அவர், ராஜீவ் சுக்லா போன்ற பெரிய நபர்களுக்குக் கீழ் வேலைசெய்யும் என்னைப் போன்றவர்கள மீது தாக்குதல்கள், குற்றச்சாட்டுகள் வருவது இயல்பு. இதில் 15 பேர் கொண்ட குழுவிற்கு தொடர்பு இருக்கிறது. 2015-ஆம் ஆண்டு நடந்ததாக சொல்லப்படும் இந்த சம்பவம் எதற்காக 2018-ல் வெளிவருகிறது என கேள்வியெழுப்பியுள்ளார். 

 

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.