Skip to main content

விளையாட வாய்ப்பு கிடைக்காதது குறித்து ரஹானே பேச்சு!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

Rahane

 

 

டெல்லி அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தது என டெல்லி அணி வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் வீரரான ரஹானே நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி மூலம் டெல்லி அணி தன்னுடைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. டெல்லி அணி வீரர் ரஹானே 46 பந்துகளில் 60 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார். இந்நிலையில், டெல்லி அணியின் வெற்றி குறித்தும், முந்தைய போட்டிகளில் விளையாட தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்தும் ரஹானே மனம் திறந்துள்ளார்.

 

அதில் அவர், "ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காதபோது மிகுந்த ஏமாற்றமடைந்தேன். அணியின் வெற்றிக்கு பங்களித்த பின் தற்போது சிறப்பாக உணர்கிறேன். நான் மூன்றாவது இடத்தில் களமிறங்கப் போகிறேன் என ரிக்கி பாண்டிங் கூறினார். அந்த இடத்தில் விளையாட நல்ல வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தேன். நெருக்கடியான நேரத்தில் அணிக்கு பங்களிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அதன்மூலம் அணி வெற்றி பெறும்போது அது கூடுதல் மகிழ்ச்சியைத் தரும்" எனக் கூறினார்.

 

 

Next Story

டெஸ்ட்டில் மீண்டும் ரஹானே; தேர்வுக்கு பின்னணியில் தோனி; வெளியான தகவல்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Rahane back in Test; Dhoni in the background for the selection; Released information

 

நடப்பு ஐபிஎல் தொடரில் ரஹானே தொடர்ந்து அசத்தி வருகிறார். கொல்கத்தா உடனான போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னை அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை மொயின் அலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். 

 

கொல்கத்தா உடனான போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்களைக் குவித்து 244 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய ரஹானே, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்ரேட் கொண்டவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 5 இன்னிங்ஸில் 209 ரன்களை குவித்து 199.04 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தில் ரஹானே நீடிக்க 198.03 உடன் ஷர்துல் தாக்கூர் இரண்டாமிடத்தில் நீடிக்கிறார்.

 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியும் அறிவித்தது. அதில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதால் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

 

டெஸ்ட் அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் தனது காலடியை ரஹானே பதிக்க உள்ளார். ரஹானே கடைசியாக இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய ரஹானே முதல் இன்னிங்ஸில் 49 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில், ரஹானே இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு பின்னணியில் தோனி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ரஹானேவின் பெயரை சேர்ப்பதற்கு முன் பிசிசிஐ தேர்வாளர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் தோனியுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

முன்னதாக ரஹானே ரஞ்சி டிராபியில் 7 போட்டிகளில் விளையாடி 634 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 57 ரன்களை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; ரஹானேவுக்கு வந்த அழைப்பு

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

Test Championship Final; A call to Rahane

 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

 

சில தினங்களுக்கு முன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காகவும் இங்கிலாந்து உடன் ஆஷஷ் தொடருக்காகவும் 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அதில், “பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசானே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், டோட் மர்பி மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மே 28 ஆம் தேதிக்குள் 15 பேர் கொண்ட இறுதி அணி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியும் அறிவித்துள்ளது. அதில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதால் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

 

டெஸ்ட் அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் தனது காலடியை ரஹானே பதிக்க உள்ளார். ரஹானே கடைசியாக இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய ரஹானே முதல் இன்னிங்ஸில் 49 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

காயத்தின் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் அணியில் இடம்பெறவில்லை. தற்போது தொடர்ச்சியாக சொதப்பி வரும் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறவில்லை. மேலும் விபத்து காரணமாக சிகிச்சையில் உள்ள ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக பரத் சேர்க்கப்பட்டுள்ளார். ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட உனத்கட் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.