ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; ஏமாற்றமளித்த பி.வி சிந்து!

04:56 PM Jul 31, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64-69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இதைத்தவிர இந்தியா இதுவரை எந்த பதக்கத்தையும் வெல்லவில்லை. இந்தநிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மின்டனில், இந்தியாவின் பி.வி சிந்து, சீன தைபேயின் தை சூ-யிங்கை எதிர்க்கொண்டார். இதில் முதல் செட்டை வெல்ல இருவரும் கடுமையாக மோதினர். இறுதியில் முதல் செட்டை தை சூ-யிங் 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்பிறகு இரண்டாவது சுற்றை தை சூ-யிங் 21 -12 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார்.

இந்த போட்டியில் தோல்வியடைந்த சிந்து வெண்கல பதக்கத்திற்காக ஹி பிங் ஜியாவோவுடன் நாளை மோதவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பாக தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர்களுள் சிந்துவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT