Advertisment

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; ஏமாற்றமளித்த பி.வி சிந்து!

pv sindhu

டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.மேலும்பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64-69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Advertisment

இதைத்தவிர இந்தியா இதுவரை எந்த பதக்கத்தையும் வெல்லவில்லை. இந்தநிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மின்டனில், இந்தியாவின் பி.வி சிந்து, சீன தைபேயின்தை சூ-யிங்கைஎதிர்க்கொண்டார். இதில் முதல் செட்டை வெல்ல இருவரும் கடுமையாக மோதினர். இறுதியில் முதல் செட்டைதை சூ-யிங் 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்பிறகு இரண்டாவது சுற்றை தை சூ-யிங் 21 -12 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார்.

Advertisment

இந்த போட்டியில் தோல்வியடைந்தசிந்து வெண்கல பதக்கத்திற்காகஹிபிங் ஜியாவோவுடன்நாளை மோதவிருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பாக தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர்களுள்சிந்துவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PV Sindhu tokyo olympics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe