Dhoni

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

2019ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக் காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தொடங்குவதாகத் தெரிகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் வருகிற டிசம்பர் 17, 18 தேதிகளில் நடக்கவுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே வீரர்கள் தட்டுப்பாடு, அட்டவணையில் குழப்பம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஐ.பி.எல். நிர்வாகம் எதிர்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு மே 31ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கிறது. இதனால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில் முக்கிய வீரர்கள் பலர் இல்லாமல் ஐ.பி.எல். போட்டிகள் பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.