Skip to main content

ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தாதீர்கள்.. பஞ்சாப் அணியினருக்கு ப்ரீத்தி ஜிந்தா வேண்டுகோள்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

Preity Zinta

 

ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தாதீர்கள் என பஞ்சாப் அணியினருக்கு அவ்வணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

13-வது ஐ.பி.எல் தொடரின் 31 -ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. பரபரப்பாகச் சென்ற இப்போட்டியில், பஞ்சாப் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல்முதலாகக் களமிறங்கிய கெயில், அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார். இந்த வெற்றி குறித்து, பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிக முக்கியமான வெற்றி. கிரிக்கெட் என்ற பெயரில் ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் வகையில் பஞ்சாப் அணி வீரர்கள் விளையாடக் கூடாது என விரும்புகிறேன். பஞ்சாப் அணியின் கிரிக்கெட் என்பது பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கானது அல்ல. களத்தில் இறுதிவரை போராடிய பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களுக்குப் பாராட்டுகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

Next Story

தங்கம் வென்ற மாதவன் மகனுக்குப் பிரபல இந்தி நடிகை பாராட்டு

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

Famous Hindi actress praises gold winning son Madhavan

 

மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதவன். தொடர்ந்து தமிழ், இந்தி மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். நீச்சலின் மீது ஆர்வமாக இருக்கும் இவரது மகன் 'வேதாந்த் மாதவன்' நீச்சல் போட்டிகளில் தொடர்ந்து பல பதக்கங்களை குவித்து வருகிறார். சமீபத்தில் டென்மார்க் தலைநகரில் நடந்த டேனிஷ் ஓபன் 2022 நீச்சல் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இருந்தார். தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வேதாந்த் மாதவனுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து  வருகின்றன. 

 

அந்த வகையில் பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா தங்கம் வென்ற வேதாந்த் மாதவனுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்தான ட்விட்டர் பதிவில் "ஆஹா! இது ஒரு பெரிய செய்தி. நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா இருவருக்கும் வாழ்த்துகள். இப்படி வெற்றியில் ஜொலிக்கும் வேதாந்தை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளீர்கள். கடவுள் அவரை எப்போதும் வெற்றி, மகிழ்ச்சி, மற்றும் அன்புடன் அருள்புரிவாராக" என குறிப்பிட்டுள்ளார். 

 

 

Next Story

ஒரே 'தல'தான்... ரசிகைக்கு பதிலளித்த கே.எல்.ராகுல்! 

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

kl rahul

 

 

13-வது ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. சமநிலையில் முடிந்த இந்தப் போட்டியில், வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. பரபரப்பாக நடந்த சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிய, வெற்றியைத் தீர்மானிக்க மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

 

முதலாவது சூப்பர் ஓவரில், கே.எல்.ராகுல் ரன் அவுட் செய்த புகைப்படத்தைப் பகிர்ந்த ரசிகை ஒருவர் என்னுடைய 'தல' எனப் பதிவிட்டார். அதற்குப் பதிலளித்த கே.எல்.ராகுல், 'ஒரே ஒரு 'தல'தான் இருக்கிறார். அது யாரென்று அனைவருக்கும் தெரியும்' எனப் பதிவிட்டுள்ளார்.