Advertisment

உலகக்கோப்பை அரையிறுதி.... மைதானத்திலிருந்து ரசிகர்களை கைது செய்து இழுத்து சென்ற போலீஸ்...

நேற்று இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த போட்டி இன்று மீண்டும் தொடரும் நிலையில், நேற்றைய போட்டியில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு கோஷம் போட்ட 4 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

police arrested four men in the middle of worldcup semifinal match

நேற்றைய போட்டியின் இடையே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வாசகங்கள் எழுதப்பட்ட டீ-ஷர்ட் அணிந்து, தனி நாடு வேண்டும் என்று 4 சீக்கியர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

icc worldcup 2019 Newzealnd team india
இதையும் படியுங்கள்
Subscribe