ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி வருவதுடன், கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரி உயிரிழந்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றவருமான பியூஸ் சாவ்லாவின் தந்தை கரோனாவிற்குப் பிந்தைய பாதிப்புகளால் உயிரிழந்துள்ளார். இதனை பியூஸ் சாவ்லா தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பியூஸ் சாவ்லா தந்தையின் மறைவுக்கு ரசிகர்களும், வீரர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ADVERTISEMENT
Show comments