Advertisment

உலகின் சிறந்த கேப்டன் அருகில் இருக்கும்போது வேறென்ன வேண்டும் -பியூஷ் சாவ்லா

Dhoni

முந்தைய ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா, இந்தாண்டு சென்னை அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அவர் 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். சென்னை அணி முதல் போட்டியில் மும்பை அணியை வரும் 19-ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டிக்காக சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் உள்ளனர். பியூஷ் சாவ்லா சென்னை அணிக்காக விளையாட இருப்பது குறித்து சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "அணி கேப்டன் உங்கள் மீது நம்பிக்கை வைக்கும்போது, நமக்கு வேறென்ன வேண்டும். எல்லா சுழற்பந்துவீச்சாளர்களும் சிறந்த கேப்டன் வேண்டும் என்றுதான் எதிர்பார்பார்கள். எனக்கு உலகின் சிறந்த கேப்டனே கிடைத்திருக்கும்போது நான் வேறு என்ன எதிர்பார்க்கப் போகிறேன். நாம் நினைப்பது போல பந்துவீச தோனி நமக்கு முழு உரிமை கொடுப்பார். அவருக்கு ஏதாவது தவறு என்று தோன்றினால் மட்டுமே நமக்கு அறிவுரை கூறுவார். அதுவும் மிக உதவிரகரமாக இருக்கும்" எனக் கூறினார்.

Advertisment

Dhoni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe