Advertisment

"நான் என்னை மாற்றுத்திறனாளி என கருதியதே இல்லை" - பாரா ஒலிம்பிக்சில் தங்கத்தை நெருங்கிய  பவினாபென் படேல்!

bhavina patel

Advertisment

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கானபாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று (27.08.2021) இந்தியாவின்பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறியதோடுபதக்கத்தையும் உறுதிசெய்தார்.

இந்தநிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில்பவினாபென் படேல், சீனாவின் ஜாங் மியாவோவைவீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம்வெள்ளி உறுதியாகியுள்ளது. பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸில்இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்லப்போவது இதுவே முதன்முறையாகும்.இதற்கு முன்னர் பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸில்எந்த இந்தியரும் காலிறுதிவரை முன்னேறியதில்லை.

அரையிறுதிப் போட்டியில் வென்ற பின்னர் பேசியபவினாபென் படேல், "நான் என்னை மாற்றுத்திறனாளிஎன கருதியதே இல்லை. இன்று நான், முடியாதது எதுவுமில்லை என நிரூபித்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

bhavinaben patel paralympics table tennis
இதையும் படியுங்கள்
Subscribe